விராட் கோலியை விடவும் மூன்று முறை ஐ.பி.எல் கோப்பையைப் கைப்பற்றிய ரோஹித் ஷர்மா பெஸ்ட் கேப்டனா?

1,113




இந்தியாவின் டி20 கேப்டன் விராட் கோலியை விடவும் மூன்று முறை ஐ.பி.எல் கோப்பையைப் கைப்பற்றிய ரோஹித் ஷர்மா பெஸ்ட் கேப்டனா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலி, ரோஹித் இருவரில் டி20க்கு யார் பெஸ்ட் கேப்டன் என்பதை பார்ப்போம்.

கேப்டனாக யார் பெஸ்ட்:

2013 ஆம் ஆண்டுதான் மும்பை அணியின் அதிகாரபூர்வ கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்படுகிறார். அதிலிருந்து ஐந்து ஆண்டுகள் அணியை வழிநடத்துகிறார். கோலி அவருக்கு முன்பாகவே பெங்களூரு அணிக்கு கேப்டனாக்கப்பட்டாலும் ரோஹித் ஷர்மா கேப்டனாக இருந்த இந்த ஐந்து வருடங்களை மட்டும் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த ஐந்து ஆண்டுகளில் மும்பை  அணியை ரோஹித் ஷர்மா 4 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார். மேலும் 3 முறை அந்த அணியை சாம்பியனாக்கியுள்ளார். முதல் முறை கேப்டன் பதவி வழங்கப்பட்டபோதே அணிக்கு கோப்பையை வென்று தந்தார். தற்போது ஐ.பி.எல் கோப்பையை அதிக முறை வென்ற கேப்டன் இவர் தான். ஆனால் கோலியோ இந்த ஐந்து ஆண்டுகளில் 2 முறை தான் அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அதிலும் ஒரு முறை தான் ஃபைனல். அதிலும் தோல்வி. 2017ஆம் ஆண்டில் 8-வது இடத்தில் அணியை வைத்துள்ளார்.

அணியின் வெற்றி தோல்விக்கு கேப்டன் முழு  பொறுப்பல்ல என்றாலும், அணியை வழிநடத்துவதிலும், சீனியர் வீரர்களை பயன்படுத்துவதிலும் கோலியை ஓவர் டேக் செய்கிறார் ரோஹித்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால் இருவரும் 3000க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளனர். ரோஹித் ஷர்மா சராசரியாக 400 ரன்களை ஆண்டுதோறும் குவித்துள்ளார். கோலியும் இதே சராசரி தான். ஆனால் 2016ஆம் ஆண்டில் கோலியின் விஸ்வரூபம் அவரை பேட்ஸ்மேனாக ரோஹித்தைவிட முன்னிலை பெற வைக்கிறது.

இந்த ஐந்து வருடங்களில் 72 லீக் மேட்ச்களை இரு அணிகளும் ஆடியுள்ளன. அதில் 32ல் கோலி அணியும், 43ல் ரோஹித் அணியும்  வென்றுள்ளன. ரோஹித் தன் தலைமையின் கீழ் 60 சதவிகித வெற்றியையும், கோலி தன் தலைமையின் கீழ் 44 சதவிகித வெற்றியையும் பதிவு செய்துள்ளனர்.

Comments
Loading...